பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம்
வழங்கினோம்!
கருணை உள்ளம் கொண்ட திருமதி. சங்கீதா மேனேஜ்குமார்
கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நிலையில் இருப்பவர்,
தன்னால் இயன்ற நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
அண்மையில், சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு 15 படுக்கைகள் வாங்கிக் கொடுத்தார்.
இன்று அவர்களுடைய 47 வது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் உள்ள பெண்கள் மனநலக் காப்பகத்தில் அறுசுவை மதிய உணவு வழங்கும்படி சொல்லி அதற்குரிய தொகை அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் சொன்னது போல அங்குள்ள 60 பேருக்கும் அறுசுவை வழங்கினோம். அங்கு உள்ள அனைவரும் திருமதி சங்கீதா மேனேஜ்குமாரின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்து,
பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.
நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நம்முடைய
வாழ்த்துகளும்
அவருக்கு உரித்தாகுக.!
💐💐💐💐🙏🙏🙏🙏🙏
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்,
9840914739
29.04.26




