கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகா, சாமியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த
ஏழை மீனவ குடும்பம்…
அன்றாடம் கடலுக்குச் சென்று வாழ்க்கை நடத்தும்
முகேஷ் – ஷமினா தம்பதியர்.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த ஏழை குடும்பத்தின் மீது இடி விழுந்தது போன்ற நிலைமை.
இவர்களுடைய 16 வயது மகள் பூஜாவுக்கு திடீரென இரண்டு சிறுநீரகங்களும் வேலை செய்யவில்லை.
மகளை குணப்படுத்த மருத்துவமனை- மருத்துவமனையாக அலைந்தார்கள்.
இதற்கு ஒரே தீர்வு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை தான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
குழந்தையை விட தன் உயிர் முக்கியம் இல்லை என்று
முடிவுக்கு வந்த
அந்த தாய் தன்னுடைய சிறுநீரகத்தை மகளுக்காக கொடுக்க முன் வந்தார்.
“நான் இறந்தாலும் பரவாயில்லை என் மகளுக்கு வாழ்வு கொடுங்கள் என்று மருத்துவர்களிடம்
வேண்டினார்.
பாண்டிச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் விரைவில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

சிகிச்சையின் போதும்
தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்கும்
பயணத்திற்கும் அவர்களுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது.
கையில் வைத்து இருந்த பணமும் செலவழிந்து விட்டது,
இந்த சிறுமியின் மருத்துவ செலவுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் மனித நேய நண்பர்களே.!
📞 புரசை வெங்கடேசன்,
உதவும்கைகள் அறக்கட்டளை,
📱 9840914739




