தொழுநோயால் பாதிக்கப்பட்ட 55 மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதநேய உதவி தேவை!

மனிதநேய அன்பான வேண்டுகோள் 🙏
அன்புடையீர், தொழுநோயால பாதிக்கப்பட்டவர்கள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பகுதியில் வாழும் சுமார் 55 மாற்றுத்திறனாளிகள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளையே பெற முடியாமல் கடுமையான சிரமத்தில் உள்ளனர்.
பலரால் மருத்துவச் செலவுகளை ஏற்க முடியாமல், தேவையான மருந்துகளை வாங்க முடியாத நிலை உள்ளது. மேலும், புதிய ஆடைகள், மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த மாற்றுத்திறனாளி சகோதரர், சகோதரிகளுக்கு நம்பிக்கையின் கரம் நீட்டுவோம்.


உங்கள் நிதி உதவியின் மூலம்:
தேவையான மருந்துகள் வழங்கப்படும்.
புதிய ஆடைகள் வழங்கப்படும்.
🛒 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்படும்.
அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கையான ஆதரவாக இருப்போம்.
உங்களால் இயன்ற சிறிய உதவியும், அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
மனிதநேயம் இன்னும் உயிருடன் இருப்பதை, உங்கள் கருணைமிக்க உதவியின் மூலம் உணர்த்துவோம்.
“நாம் கொடுக்கும் உதவி ஒரு பொருள் அல்ல; ஒரு குடும்பத்தின் முகத்தில் மலரும் புன்னகை.”
தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி, இந்த நற்செயலில் பங்கெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
இறைவன் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் எல்லா நலன்களுடனும் ஆசீர்வதிப்பாராக. புரசை உதவும் கைகள் அறக்கட்டளை புரசை வெங்கடேசன் 98 40 91 47 39

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91